Wednesday 28 November 2012

குலத்தொழில்

என்னடா இது, இந்த நாகரீக காலத்துல குலத்தொழில் பத்தி எல்லாம் பேசுறான் என்று நினைக்கிறீர்களா? சரி தான், இப்போது யாரும் தங்களது குலத்தொழிலை செய்வதில்லை. ஆனால், நம்மில் பலரும், தங்களையும் அறியாமல், தங்கள் குலத்தொழிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

கஷ்டம் வரும் போது கடவுளிடம் முறையிடு. ஆதாயம் கிடைக்கும் போது, அதில் கொஞ்சம் கடவுளுக்கு வழங்கு.

ஆமாம், நினைவில் கொள்ளுங்கள், 'உங்களுடைய குலத்தொழில், உங்கள்  கடவுளை வழிபடுவது'.

அன்று,  தந்தை, தன் பிள்ளையை தோளில் சுமந்து சென்று இறைவழிபாடு செய்தார். இன்று, அந்தப் பிள்ளை, அதன் குழந்தையை காரில் கூட்டிச் சென்று இறைவழிபாடு செய்கிறது. இதற்கிடையில் ஒரு இருபத்தைந்து வருடம் ஓடிவிடுகிறது. இந்த இருபத்தைந்து வருடத்தில், அந்த பிள்ளையின், படிப்பு, வேலை மற்றும் சமுதாயம் பற்றிய அறிவு இன்னும் பிற விசயங்கள் பற்றிய அறிவும் மகத்தாக வளர்ந்துவிடுகிறது. பாவம்,  அந்த பிள்ளைக்கு, தான் வழிபடும் கடவுளின் பால், நினைத்துப் பார்க்க, சிந்தனை செய்ய ஒரு நிமிடம் கூட கிடைக்க வில்லை. 

இங்கு, ஆதாயம் தரும் விசயங்களை மட்டுமே சிந்தனையாக ஏற்றுகொள்கிறார்கள். உதாரணத்துக்கு, இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு, நட்சத்திரங்களிடம் பேசிக் கொண்டிருந்தால்.  வீட்டில், 'சரிதான், இவனுக்கு ஏதோ ஆய்டுச்சு' என முடிவு செய்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்த வரை கடவுளைப் பற்றிய சிந்தனையும் கிட்டத்தட்ட இந்த மாதிரி தேவையற்ற ஒன்று தான். இவற்றைப் பற்றி பேசுவதும், விவாதிப்பதும் அனாவசியமானது.

No comments:

Post a Comment