Thursday 30 December 2010

எந்தாய் பத்தி

எந்தாய் பத்தி கவிதை எழுத
தடால்னு கிளம்பிட்டேன்.

ஒண்ணும் வரலையேன்னு
ஓரமா இருந்திட்டேன்.

உலகமே எழுதிருச்சு
எனக்கு ஒரு வழியில்லை.

நான் கவிதை எழுத
என் தாய் ஒண்ணும் செய்யலையோ?

நான் கவிதை எழுதணும்னு
அவ எதையும் செஞ்சதில்ல.

அவ மேல கவிதை சொல்லி
அனுபவிக்க அவளுமில்ல.

கிழிஞ்ச சட்ட போட்டப்பவே
"ராசா மாதிரி இருக்கேனு" சொன்னவ.

என் கிறுக்கல கவிதைனு சொன்னா
இல்லேன்னா சொல்லுவா!

No comments:

Post a Comment