Friday 26 October 2012

மேலும், கீழும்.

சில தினங்களுக்கு முன்பு, நான் குளித்துவிட்டு, துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, குளியலறையில் இருந்து வெளியே வந்தேன்.


எனது மூன்றரை வயது மகள், என்னைப் பார்த்தவுடன் "டாடி... ஷேம், ஷேம் பப்பி ஷேம்..." என்றால். "ஹே...நான் தான் கீழ துண்டு கட்டி இருகேன்லே" என்றேன். "அப்பா, நான் கீழ 'ஷேம், ஷேம் பப்பி ஷேம்' சொல்லல, மேல தான் சொன்னேன்" என்றால். "நான் ஆம்பள பையன் தானே, பொண்ணுனா தான் மேல பப்பி ஷேம் சொல்லணும்" என்றேன். "ஏன்?" என்றால்.   சற்று நேர யோசனைக்குப் பின், இன்னொரு துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டேன். "இப்போ ஓகே வா?" என்றேன். "ம்ம்ம்...இப்ப தான் டாடி, குட் பாய்!" என்று என்னை கட்டிகொண்டாள்.

1 comment: